Monday, February 29, 2016

தனியே  தன்னந்தனியே .......கீரனூர் ,கூஹுர்...நாச்சியார்கோவில்



அன்பர்களே  சீறி பாயும் வாகனங்கள் இல்லை புகை இல்லை ஆளுயர கட்டடங்கள் இல்லை ....
எங்கும் அமைதி .....பறவைகளின் ரீங்காரம் .....பச்சை பசேல் வயல் வெளிகள் .....

அங்கு கொஞ்சி விளையாடும்  நம் குல பெண்கள் ...ஆண்கள் (விவசாய  பணியாளர்கள்)

இதமாக நம்மை  தாலாட்டும்  தென்றல்.....

ஆஹா ...இப்படியோரு  சூழலில்  ஒரு திருகோயில்  இருந்தால்  எப்படி இருக்கும்?

இதோ  உள்ளது  கீரனூர் ...
அங்கு  ஒரு சிறிய  திருகோயில்  ஒன்றில்  வீற்றிருக்கிறார்  அகஸ்தீஸ்வரர் ...

குடந்தை  நாச்சியார்கோயில் அருகே நன்னிலம்  சாலையில் ..
பிரதான சாலையிலிருந்து  நடந்து தன செல்ல வேண்டும் ....
அதனால்  என்ன? உடற்பயிற்சியுடன் கூடிய ஆலய தரிசனம் நல்லது தானே?

கொடுத்து  வைத்திருப்பவர்கள்  செல்லுங்கள் ....வணங்குங்கள் ....

Sunday, February 28, 2016

18 புதுக்குடி , குடந்தை , ஸ்வேதாரண்யேச்வர சுவாமி 

அன்பர்களே குடந்தை ---பூந்தோட்டம் சாலையில் உள்ள புராதன பெருமை , பழமை நிறைந்த திருகோயில் இது .....

ஆனால் அதிகம் அறியபடாமல் உள்ளது .......

பக்தர்கள்  இன்றி வெறிச்சோடி இருக்கிறது ....

பெரும்பாலும் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் திருகோயில்களையே  நாடுகிறார்கள் .....

கால் கடுக்க நின்று அதிக பொருட் செலவில்,  இறைவனை தரிசிப்பதை விட 
இம்மாதிரி பழமை  நிறைந்த  கிராமத்து திருகோயில்களை தரிசிப்பது மிகுந்த ஆத்ம திருப்தியை  அளிக்கும் .....

இதை அனுபவத்தில்  உணர , அன்பர்களே நம் கிராமத்தில்  இருக்கும் திருகோயில்களை  தரிசனம் செய்யுங்கள் ..

அந்த திருகோயில் களின் வளர்ச்சிக்கு  இதுவே முதல் படி ...



Saturday, February 27, 2016


மெய்ஞான மூர்த்தி திருகோயில் , முதல் கட்டளை 

கிராமம் .



கும்பகோணம் வட்டம் , அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை மெய்ஞான மூர்த்தி திருகோயில் , முதல் கட்டளை கிராமம் .

அன்பர்களே புராண வரலாறும் , வரலாற்று சிறப்பும் உடைய இத்திருகோயில், வியாச பகவானுக்கு, இறைவன் 
சிவனடியார் வேடத்தில் வந்து , அவர் அஞஞானத்தை அகற்றி மெய்ஞானத்தை, வேதத்தின் பொருளை உணர்த்திய இடம் இது..



அவர் இங்கு பலகாலம் தங்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கிய மூர்த்தியே , மெய்ஞானமூர்த்தி ஆவார் .

அச்சுதப்ப நாயக்கர் திருவிடைமருதூர் திருகோயிலுக்கு நிவந்தனமாக அளிக்கப்பட கிராமம் இது .
இது அருகில் உள்ள இலந்துரை திருகோவிலில் கல்வெட்டில் காணப்படுகிறது .நாயக்கர்களுக்குப்பின் வந்த
மராட்டிய மன்னர்களில் ஒருவரான துளஜா என்பவர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு தன்
மனக்குழப்பம் நீங்கப்பெற்றார் .பல திருப்பணிகளையும் இவர் செய்துள்ளார் .

கல்வியில் பின்தங்கியவர்களும் , பெரும் மன குழப்பத்தில் சிக்கியவர்களும் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலன் பெறுகின்றனர்.

நாளைடைவில் பெரிதும் சிதைவுற்ற இத்தலம் இன்று அன்பர்களால் புனரமைக்கப்பட்டு வருகிறது.
எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடித்து , குடமுழுக்கு நடத்துவதற்கு தங்கள் மேலான ஆதரவு தேவைபடுகிறது .


மெய்ஞான மூர்த்தி நற்பணி மன்றம் .
பி. கல்யாண சுந்தரம் (தலைவர்), முதல் கட்டளை எண் : 9489504915

ஆலய நிர்வாகி : ம. உப்பிலி , 9486406817, 9487031796



Friday, February 26, 2016

ஸ்ரீ பார்வதி அம்பாள் சமேத ஸ்ரீ கண்ணேஸ்வர சுவாமி திருகோயில் பெங்களூர் ......

BTM  layout , மடிவாலா அருகில் அமைந்துள்ள அற்புதமான ஒரு திருகோயில் .....
லிங்க வடிவில் அமைந்துள்ள இறைவன் பின்னால்  உருவத்துடனும் அம்மைஅப்பன் காட்சியளிக்கிறார் ....
அதுமட்டுமில்லாமல் கண்ணப்ப நாயனார் அருகில் வணங்கும் கோலத்தில் ...










































மதுரம்ம திருகோயில் வளாகத்தில் இத்திருகோயில் உள்ளது .....

பெங்களூர் திருகோயில்களில் நாம் முக்கியமாக காணும் சிறப்பு அம்சம் என்னவென்றால் ....
மிக சுத்தமாக பராமரிக்கப்படும் கோயில்கள் ......என்னை பிசுபிசுக்கு அறவே இல்லை ....
அங்கும் இங்கும் குங்குமம் விபூதி சிந்தப்படுவது கிடையாது .....
மிக அற்புதமாக அலங்காரம் மிக ஸ்ரத்தையாக செய்யப்படுகிறது ...

இவை என்னை மிகவும் கவர்ந்தது ......
நம் திருகோயில்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டும் .....


தில்லைக்கு  இணையான தலம் ......காசிக்கு 

இணையான தலம்,,,,,,கங்கை நதிக்கு 

இணையான  தீர்த்தம் 


சிதம்பரம் திருத்தலத்துக்கு இணையாக இந்த வடதில்லைத் தலமும் போற்றப்பட வேண்டும் எனும் நோக்கத்துடன், கோயிலுக்கு நிலங்களையும் நிவந்தங்களையும் வாரி வழங்கினான் மன்னன். நந்தியாறு எனும் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்த இந்தக் கோயில்- காசிக்கு நிகரான தலமாகவும், ஆரணி ஆறு-கங்கைக்கு இணையான தீர்த்தமாகவும் போற்றப்பட்டது. ஆற்றில் நீராடி, இறைவனைத் தொழுதால் , பாவங்கள் யாவும் தொலையும்; தோஷங்கள் அனைத்தும் கழியும் என்பது ஐதீகம் ! எனவே, இங்கேயுள்ள சிவலிங்கத் திருமேனிக்கு பாபஹரேஸ்வரர் என்றே திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர் மக்கள். மூலவருக்கு அருகிலேயே, கருவறையில் உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனாருக்குக் கிடைத்த லிங்கத் திருமேனியும் உள்ளது.

 மூலவரின் அருகிலேயே காசியில் கிடைத்த உள்ளங்கை அளவிலான பாணலிங்கம் இருப்பது சிறப்பு.


எங்கே உள்ளது?


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது வடதில்லை கிராமம். ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது வடதில்லை (பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு) கோயம்பேட்டில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. ஊத்துக்கோட்டையில் இருந்து மாம்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணித்தால், வடதில்லையை அடையலாம். ஊத்துக்கோட்டையில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது



Thursday, February 25, 2016


மறவாமல்  செல்லுங்க செல்லூர்



செல்லூர் கைலாசநாதர் திருகோயில் , குடவாசல் வட்டம் .கொரடாச்சேரி அருகில் 
தேவார பாடல் பெற்ற தலமான திருகொள்ளம்புதூர் செல்லும் வழியில் 
சாலை ஓரமாகவே இத்தலம் உள்ளது
திருப்பணி செய்யப்பட்டு திருகோயில் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது
அடியார் பெருமக்களே தவற விடாமல் தரிசியுங்கள்.





Tuesday, February 23, 2016

என்றும் குன்றாத இளமை பொலிவு  வேண்டுமா? 

.
 இங்கே வாங்க !!!!


அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம்.

அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை.
 



கங்கைக்கு நிகரான தீர்த்தம் ...காசிக்கு நிகரான 

தலம் ......




அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை தென்கங்காபுரிஸ்வரர் திருக்கோயில், சின்ன நரிமேடு, எடையார்குப்பம் பண்ருட்டி தாலுக்கா திருவஹீந்திரபுரம் அருகில், கடலூர்.
ஒரு காலத்தில் மிகப்பெரும் கோயிலாக இருந்திருக்கூடிய கோயில் இன்று ஒற்றை சன்னிதியுடன் பாழடைந்து கிடக்கிறது. 
தென் கங்கை என நாவுக்கரசரால்போற்றப்பட்ட இப்பகுதியில் பாயும் கெடில நதியோ இன்று நீரின்றி வறண்டு முட்புதராக காட்சியளிக்கிறது .
கருவறைக்குள் மிக பிரம்மாண்டமான ஈசன். எளிய அலங்காரத்தில், அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளார்.
பவுர்ணமி தோறும் நிலவொளி மூலவரின் மீது படுவது சிறப்பு.
அருகேஉள்ளதிருவதிகையில் முப்புரம் எரித்த இறைவனார் இங்கு
கெடில நதியில் மூழ்கி தன வெப்பத்தை தனித்துகொண்டு, பூந்தோட்ட வனமாக திகழ்ந்த இத்தலத்தில், ஓய்வெடுத்ததாக தலபுராணம். எனவே இத்தலத்து இறைவன உடலில் உள்ள வெப்பநோயை போக்கும் வைத்தீஸ்வரராகவும், மருந்தீஸ்வரராகவும் இருந்து அருள்புரிகிறார்.





Sunday, February 21, 2016

ஜம்மு -காஷ்மீர்  பாரமுலா  மாவட்டம் ...இங்குள்ள தேசிய பூங்கா ஒன்றில் உள்ள மிகப்பெரிய சுயம்பு லிங்கம் 


மகாமக குள தீர்த்தங்களின் பலன்கள்:
மகாமகக் குளத்தில் இருக்கும் ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு பலன் தர வல்லது.
1. இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.
2. அக்னி தீர்த்தம்- பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
3. யமதீர்த்தம் - மரண பயம் போக்கும்.
4. நிருதி தீர்த்தம் - பேய், பூதம் போன்ற தேவையற்ற பயங்கள் நீங்கும்.
5. வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.
7. குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.
8. ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.
9. பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோரைச் சாந்தப்படுத்தும்.
10. கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.
11. யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.
12. கோதாவரி தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.
13. நர்மதை தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.
14. சரஸ்வதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.
15. காவிரி தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.
16. குமரி தீர்த்தம் - வளர்ப்புப் பிராணிகளுக்குப் பலன்களைக் கொடுக்கும்.
17. பயோஷ்னி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.
18. சரயு தீர்த்தம் - மனக் கவலை தீர்க்கும்.
19. அறுபத்தாறு கோடி தீர்த்தம் - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.
20. தேவ தீர்த்தம் - சகல பாவங்களும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.




Saturday, February 20, 2016

பஞ்ச  பாண்டவர்கள்  வழிபட்ட  பரமன் 

திருகோயிலின் பரிதாப நிலை 

பஞ்சபாண்டவர்களில் தர்மர் வழிபட்ட அச்சுதமங்கலம் தர்மேஸ்வரர் திருகோயில்..மிகவும் சிதைந்த நிலையில் உள்ள இந்த திருகோயிலை உள்ளே சென்றுவழிபடவும் மிக அச்சமாக இருந்தது . அந்த அளவிற்கு இடிபாடுகள்......
அச்சுதமங்கலம் புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது. நன்னிலம் வட்டம். நாகை மாவட்டம்.


முத்தான மூன்று திருகோயில்கள் இங்கு உள்ளன..
பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வழிபட்ட ஐந்து திருகோயில்கள் ஒருகாலத்தில் இங்கு விளங்கியதாக தெரிவிக்கின்றனர்.


இன்று மூன்று திருகோயில்கள் இருக்கிறது. காசி விஸ்வநாதர் திருகோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு கோயில்கள் திருப்பணி செய்யப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மற்ற  கோயில்கள்  சோமேஸ் வரர்  திருகோயில் , காசி விஸ்வநாதர் திருகோயில் 


Thursday, February 18, 2016

ஈஞ்சம்பாக்கம்  இன்னமுதன் 


ஈஞ்சம்பாக்கம் .... காஞ்சீபுரம்  அருகில் உள்ள இந்த சிறிய கிராமத்தில் அமைந்துள்ள மிக புராதனமான திருகோயில்   இது..  காசி விஸ்வநாதர் திருகோயில்  ....

சமீப காலத்தில்  திருகோயில் கட்டப்பட்டு  இரண்டு  கால பூசைகள்  நடைபெறுகிறது 

விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரருக்கு  தனி தனி சந்நிதிகள் அமைந்துள்ளது ...
தொடர்புக்கு : Mr. EEnja Naicker 8220543336, Mr. Anbarasu 9444274023, Mr. K. Dayalan 9597158782, Mr. Chandirababu 8489518601 Mr Neelakandan 9715213778 and Mr. Krishnan 9944392282. 

இந்த தலம்  அரக்கோணம் --காஞ்சி   பாதையில்  அமைந்துள்ளது ...

Wednesday, February 17, 2016

வெண்பாக்கம்  அகஸ்தீஸ்வரர்  திருகோயில் , 


தேவார பாடல் பெற்ற தலமான  திருமால்பூர்  அருகே இந்த கிராமம் உள்ளது.  

இங்கே பலகாலம்  வெட்ட வெளியில்  வீற்றிருந்த இந்த  பெருமானுக்கு மேற்கூரை  அமைக்க முற்பட்டனர் ...

ஆனால்  என்ன அதிசயம்...  திருகோயில்  கட்டி முடிக்கப்பட்டுள்ளது .....குடமுழுக்கும்  நடந்தேறிவிட்டது 

இது பெருமானின்  திருவிளையாடல்  அன்றி  வேறென்ன?

இந்த அரிய  சிவபணியை  முடித்த  அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும் சிவபெருமானின்  அருள்   என்றும்  
நிலைத்து  நிற்கும் ....
இப்பணிக்கு  உதவியோர் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை...மற்றும் கிராம  மக்கள் ....அடியார்  பெருமக்கள்  ஆகியோர் ...
தொடர்புக்கு :- திரு.வஜ்ரவேல்-9894920411 






துயரங்கள்  தீர்ப்பார்  தருவை  பெருமான் 


தருவை வாழவல்லபபாண்டீஸ்வரர், திருநெல்வேலி மாவட்டம்

புராதன பெருமைகள்  நிறைந்த  தருவை  திருகோயில் ... திருநெல்வேலியில் அமைந்துள்ள புராதனமான திருத்தலங்களில் மிக முக்கியமானது .. 

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இந்த மன்னர் காலத்தில் 1216-1239) தருவயில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

இங்கு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் மற்றும் உய்யகொண்டம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்த இடங்கள் ஆகும். 




Thursday, February 11, 2016

சிகா முடிநாதர் ---சிவசைலம் --நெல்லை 


பரம கல்யாணி உடனுறை சிவசைல நாதர் திருகோயில் சிவசைலம்.திருநெல்வேலி மாவட்டம் , கள்ளகுறிச்சி வட்டம்.
கடனா நதிக்கரையில் அமைந்த அற்புத திருகோயில் இது. நந்திஎம்பெருமானின் அழகு வார்த்தையில் அடங்காது.மூலவர் சுயம்பு.
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்.

பெருமான் சிவசைல நாதர் தலையில் முடி போன்ற அமைப்புடன் காணப்படுகிறார் . வேறெங்கும் காண முடியாத விசேஷ 

அமைப்பு இது .





திருப்பணியை  எதிர்நோக்கும்  திருகோயில் 


உளுதமங்கலம் -அருள்மிகு கயிலாச வாசன் திருக்கோவில், செங்கல்பட்டு வட்டம் ( கருங்குழி ரயில்வே கேட் அடுத்து இடதுபுறம் 2 km ல் இவ்வூர் உள்ளது)சுவாமி பெரியபாணம் , மேல்தளம் கான்கிரிடில் போடப்பட்டுள்ளது .

தொடர்புக்கு - திருமதி.இராஜகுமாரி - 9092983596.




மாலவன்  வழிபட்ட மகேசன் --குடந்தை 


திருமால் வழிபட்ட திருமாலீச்வர பெருமான், குடந்தை .

வியாழன் வழிபட்ட வியாழ சோமேஸ்வரன் திருகோவிலில் இவர் சன்னதி தனி சன்னிதியாக அமைந்துள்ளது.
அம்பாள் ராஜேஸ்வரி நீண்டு நெடிதுயர்ந்த எழில் திருகோலம்.
இவர் சந்நிதியில் அமைந்துள்ள கல்யாண விநாயக பெருமானை மனமுருகி வழிபட திருமணம் தடை பட்டவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது.

இத்தலம் குருஸ்தலமாகவும் போற்றப்படுகிறது.குடந்தை நகரின் மையப்பகுதிலேயே இத்திருகோயில் அமைந்துள்ளது .

உச்சரிப்பு பிறழ்ந்து வியாழ சோமேஸ்வரரை , ஏழை சோமேஸ்வரர் என பலர் அழைகின்றனர்.அதுதான் வருத்தமாக உள்ளது.




Wednesday, February 10, 2016

காமரசவல்லி  அரியலூர்  மாவட்டம் 

பாலாம்பிகை  உடனுறை  சௌந்தரேஸ்வரர்  திருகோயில் 


கார்கோடகன்  பூசித்ததால் இறைவன் திருநாமம்  கார்கோடேஸ்வரர் என்று  அழைக்கப்படுகிறார் ....
இறைவன் வாரி வாரி வழங்கும்  வள்ளல்  என்பதால் வள்ளலார்  கோயில்  என்றே அழைக்கப்படுகிறது ...
பிருங்கி  மகரிஷி  வணங்கிய தலம் 
கடக ராசிக்காரர்கள் வணங்க  வேண்டிய தலம்
ரதி  தேவிக்கு  மாங்கல்யம்  அளித்ததால்  மாங்கல்ய  தோஷம் நீக்கும் தலம்..
நாக தோஷம்  நீக்கும் தலம் ....
திருமண தடை , ஆண் வாரிசு இன்மை , தம்பதிகள்  பிரிவினை , குடும்பத்தில் அகால மரணம் , உத்தியோக தடை , கல்வி அறிவு பாதிக்கப்படுதல்
இவை அனைத்தும்  நீங்க  வணங்க வேண்டிய தலம் இது ....

குடந்தை  மகாமக  குளம் போல்  திருகுளத்திற்க்குள்  இங்கு  பல  தீர்த்தங்கள்  அமைந்துள்ளது ....நீராடுவது  மிக சிறப்பு..

ரதிதேவிக்கு  காமனை  உயிர்பித்து  தந்ததால்  இறைவிக்கு  காமராதிவல்லி  என்று பெயர்...
இன்றும்  ஒவ்வொரு  மாசி மாதம்  பௌர்ணமி  தினத்தன்று காமன்  பண்டிகை  நடத்தப்படுகிறது ..
இத்திருகோயிலில்  தினசரி  சேவை  செய்பவர்கள்  தீராத  வினை தீரும் ..
இது  கோவில்  கோபுர  முகப்பிலேயே  குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த  இறைவன் புரிந்த திருவிளையாடல்கள்  கணக்கற்றவை ...இன்றும் ...





























இத்தகைய  சிறப்பு  வாய்ந்த இந்த திருக்கோயில்  நாளடைவில்  நலிவுற்றது ...

தற்போது  பெரிய அளவில்  திருப்பணி  மேற்கொள்ளப்பட்டு திருகோயில் குடமுழுக்கு  செய்யப்பட்டுள்ளது ....

தொடர்புக்கு :  திரு  M. Kamaraj
cell:9787353895

Tuesday, February 9, 2016


இயற்கையின்  பேரதிசயங்களில்  ஒன்று ---லக 

மண்டல் ---உத்தரகண்ட் 
























லட்சகணக்கான  ஆலயங்களின்  அணிவரிசை  என்பது  லக  மண்டலின்  பொருள் .....

டேராடூன் மாநிலத்தில்  அமைந்துள்ள  புராதன  பெருமையையும் பழமையும்  உடைய  திருகோயில்கள் ...மறைந்திருக்கும்  அதிசயங்கள்..

பாண்டவர்கள்  மறைந்து  இருந்து  வாழ்ந்த போது , அவர்கள் தங்கியிருந்த  அரக்கு  மாளிகையில் , துரியோதனன்  அவர்களை பூண்டோடு கொல்ல  முயற்சித்தான்  அல்லவா?

அந்த  நிகழ்வு  இங்கு தான் நடந்தது ...

இங்குள்ள ஆயிரகணக்கான  லிங்க திருமேனிகள் , வழுவழுப்பான பளிங்கு  கல்லினால்  செய்யப்பட்டுள்ளது ...

கண்ணாடி போன்று  நம் உருவம் தெரியும் விதத்தில் அமைந்துள்ள அந்த லிங்க திருமேனிகளை  பார்க்க பார்க்க  பரவசமூட்டும்..

சாக்ரதாவிலிருந்து முசௌவ்ரி செல்லும்  சாலையில்  100 கிலோ மீட்டரில்  உள்ளது லக  மண்டல் ..

ரயில்  நிலையம் டேராடூன்  ரயில்  நிலையம் 
விமான  பயணம்  என்றால் ஜாலி க்ரான்ட்  விமான  நிலையம் 
விண்மீன்கள்  வழிபட்ட வேத நாயகன் 


செர்பணன்சேரி , காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜா வட்டம் ,
தாம்பரம் ---வாலாஜா  பேருந்து பாதையில் ஓரகடம்  அடுத்து உள்ளது

இங்குள்ளது  விண்மீன்கள் வழிபட்ட வீமீஸ்வரர்  திருகோயில்..
மிகவும் சிதைவுற்று  இருந்தது ..... கற்றளியான இத்திருகோயில் ......
கஜப்ரிஷ்ட அமைப்பு ....
தற்போது  இதன்  நிலை  தெரியவில்லை ......

அன்பர்கள்  யாரேனும்  அறிந்தால்  தெரிவியுங்கள் .....

பெருமான்  மிக  அற்புதமான  திருமேனி  கொண்டவர் ......
மறக்க முடியாத  திருவுருவம் ...

Friday, February 5, 2016

அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் , மயிலாடுதுறை தாலுகா. நாகப்பட்டினம் மாவட்டம்.

சனி  பிரதோஷம்  நாளை...மறந்துவிடாதீர்கள் 



















நீடூர் ...மயிலாடுதுறை 
இத்திருகோயிலில் இறைவன் சுயம்புலிங்கமாக, இரு தள விமானத்தின் கீழ் அருள்புரிகிறார்.
மகாவிஷ்ணு வழிபட்டுள்ளார்.

நண்டு துளைத்த வடு இறைவன்மீது காணப்படுகிறது.

ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 21 வது தேவாரத்தலம் ஆகும்.

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

தேவாரபாடல் பெற்ற தலமாக இருந்தாலும் பக்தர்கள் கூட்டம்
அறவே இல்லாததால் ஆலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மனதிற்கு இது மிகவேதனையாக உள்ளது.

(படத்தில் பிரகாரத்தில் உள்ள கைலாசநாதர்)

Thursday, February 4, 2016

திருவிடைக்கழி, திருக்கடையூர் ,மயிலாடுதுறை 

இப்பூவுலகில் முருகப்பெருமான் பாதம் பதிந்தஇடம்இரண்டு....
ஒன்று வள்ளிமலை...மற்றொன்று திருவிடைக்கழி எனப்படும்
திருக்கடையூர் அருகில் உள்ள திருத்தலம்....
இத்தலத்திற்கு பல்வேறு சிறப்புகள்உள்ளது.....
இங்குள்ள குராமரத்தடியில் குகன் சிவபெருமானை வணங்கினார்....
















கருவறைக்குள் கருவறை என்னும் சிறப்புஉடையது
ஒரேகருவறையில் தந்தையுடன் தனயன் அருள்புரிகிறார்..
நவக்ரகங்கள் சன்னதி கிடையாது....
பிரதோஷ தினத்தன்று முருகனே திருஉலா காண்கிறார்...
இறைவன் பாப விநாசர் என்ற பெயர்கொண்டு விளங்குகிறார்..
முருகப்பெருமானே இத்திருகோயிலில் பிரதான இடம் பெற்றுள்ளார்...
இத்திருகோயில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே ஆறு கிலோமீட்டரில் உள்ளது...



அன்பர்களே மேலும் இத்திருத்தலத்தில் அனேக அதிசயங்கள் உள்ளன .

இங்கு அம்பாள் சந்நிதி கிடையாது .
நவகிரங்கங்கள் கிடையாது .
இரண்யாசுரன் மகனான சூரபன்மனை கொன்ற பாபம் நீங்குவதற்காக , இங்கு முருகப்பெருமான் குரா
மரத்தடியில் இறைவனை ஸ்தாபித்து வழிபட்டார் .

திருவிசைப்பா பெற்ற தலங்களுள் ஒன்று.

நந்திஎம்பெருமானுடன் , முருகனுக்குரிய யானை வாகனமும் காணப்படுகிறது .
இத்திருகோயில் திருகடையூரிலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது
.

Wednesday, February 3, 2016

அருள்மிகு பரசுநாதசுவாமி திருக்கோயில், 

முழையூர் ,குடந்தை, தஞ்சாவூர்-மாவட்டம்.
குடந்தை--பட்டீஸ்வரம்  சாலையில் இத்தலம் உள்ளது .




















தந்தையின் உத்தரவுப்படி தனது தாயை வெட்டிய பரசுராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபூஜை செய்தார். அவர் முழையூர் திருத்தலத்திற்கு வந்தார். ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார். அவருடைய தோஷம் நீங்கியது. இதன் காரணமாக சுவாமிக்கு "பரசுநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஞானாம்பிகையுடன், பரசுநாதர் கோயில் கொண்டுள்ள இந்த தலம் பாழ்பட்டு கிடந்தது. உள்ளூர் பக்தர் களின் முயற்சியால் ராஜகோபுரம் சீரமைக்கப் பட்டு, கோயிலுக்குள் உழவாரப்பணி நடந்துவருகிறது.
இங்கே ஒரு காலத்தில் மகாமகம் போல மிகப்பெரிய அளவில் திரிதியை விழா நடந்திருக்கிறது. வட மாநில பக்தர்களும் வந்தார்கள். அப்போது தங்கக்காசுகளால் சுவாமிக்கு காப்பிடப்படும். பிறகு இது படிப்படியாக குறைந்து விட்டது. சமீப காலமாக இந்தத்தலம் மீண்டும் புகழ் பெற்று வருகிறது.

Monday, February 1, 2016

சிங்கபுரீஸ்வரர்  , கோயில்பதாகை, ஆவடி 

திருமேனி  அழகர் என்றும்  இவர் அழைக்கப்படுகிறார் .....
அவ்வளவு  அழகு  பொருந்திய  திருமேனி .. பார்க்க பார்க்க பரவசம் ஏற்படுத்தும் .....


























அன்பர்களே .....இப்பெருமான்  காலம் , மற்றும்  புராண வரலாறுகள்  அறியப்படவில்லை ....
எனினும் திருமாலின்  நரசிம்ம   அவதாரத்தொடு  தொடர்புடைய  திருகோயில்  என்று  சொல்கிறார்கள் ...

ஆவடிக்கு  வெகு அருகில்  உள்ளது இத்திருகோயில்  எனினும்  அதிகம் அறியப்படாமல்  உள்ளது .....அதுதான் வேதனை ....
அருகிலேயே  கைலாசநாதர்  திருகோயில்  உள்ளது ...

இத்திருகோயில்களை  அடையும்  முன்  பிரதான சாலையில்  பிரசித்தி  பெற்ற  பெருமாள் ஆலயமும்  உள்ளது ....

அன்பர்களே  வரும் சனி பிரதோஷத்திற்கு அனைவரும் திரளாக கலந்து  கொள்ளுங்கள் ..
இத்திருகோயில் கள்  வளர்ச்சி  பெற உதவுங்கள் .....