Friday, October 28, 2016

மனம் நிறைவான வாழ்க்கைக்கு மண்ணிப்பள்ளம் ஆதிவைத்தியநாதர் தரிசனம் 

முகநூல் அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் .......
இன்று பிரதோஷம் .....எனவே தவறாமல் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்யுங்கள்.

இந்த பிரதோஷ தினத்தில் பழமையும் புராதன பெருமையும் ஒருங்கே அமைந்த 
மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாதர் திருகோயில் தரிசனம் செய்வோம் .....

புள்(சடாயு பறவை ) இருக்கு (ரிக் வேதம் ) வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அறிமுகம் தேவையில்லை ....அன்பர்களே... ஆனால் இங்கு சுற்றிலும் அமைந்துள்ள பஞ்ச வைத்யநாத தலங்களை ஒரே நாளில் வழிபட , நம் வினை பயன்கள் தொலைந்து , வியாதிகள் தீர்ந்து , நன்மை மிக விளையும் ..
மயிலாடுதுறை வட்டம், சீர்காழி அருகே உள்ள இந்த தலம் பஞ்ச வைத்யநாத தலங்களில் இத்தலம்  முதன்மையாக போற்றப்படுகிறது.

மற்ற தலங்கள் : ராதா நல்லூர் , பாண்டூர்,ஐவ நல்லூர் , வைத்தீஸ்வரன் கோயில் , தலங்களாகும் .

இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பு. திருக்கோயில் அன்பர் ஒருவரது சீரிய முயற்சியால் சிதைவிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்று அற்புதமாக திகழ்கிறது ......

கருவறையில் ஆதி வைத்தியநாதர் மிகப்பெரிய திருமேனி கொண்டு அற்புதமாக காட்சி யளிக்கிறார் .

இத்தலத்திற்கு அருகிலேயே கொண்டல் முருகப்பெருமான் ஆலயம், திருகுரக்குக்கா ,வாளொளிபுத்தூர் திருக்கோயில் போன்ற அரிய திருத்தலங்கள்  அமமைந்துள்ளன ...

Wednesday, October 26, 2016

எல்லாமே இங்கு சதுரம் 
காஞ்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் அருகிலுள்ள 'சோமங்கல சோமநாதர் கோவில்.' இங்குள்ள நடராஜர் எங்குமில்லாத சதுர தாண்டவ கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இக்கோவிலும் கோவிலைச் சுற்றி வேலி போன்று 12 எல்லைக் கோவில்களுடன் சரியான சதுரஅமைப்பில் சதுர்வேதியாக அமைந்துள்ளது.
எங்குமே காண இயலாததாகும்.

இதனாலேயே இக்கோவில் ' சதுர்வேதி ' என்றும் ' சதுர தாண்டவ ஆலயம் ' என்றும்
கூறப்படுகிறது. 

இக்கோவிலின் தலவிருட்சம் சரக்கொன்றை மரம்.


சென்னையை  சுற்றியுள்ள நவகிரஹ திருக்கோயில்களில் முதன்மையானதும் , சந்திரன் வழிபட்ட தலமாகவும் விளங்குகிறது .......சோமன் (சந்திரன்)  வழிபட்டதால் சோமநாதர் என இறைவன் அழைக்கப்படுகிறார்...


திங்கட்கிழமைகளில் வழிபட மன கிலேசங்கள் , மன குழப்பங்கள் நீங்கி  மனம் புத்துயிர் பெறும் .....
சென்று வணங்கி வாருங்கள்...மனம் லேசானதை உணர்வீர்கள் ......



Thursday, October 20, 2016

நீங்கள்  விரும்பும் நபரிடமிருந்து அன்பு ,பாசம் , பரிவு உங்களுக்கு கிடைக்கவில்லையா ?  

நிச்சயம் கிட்டும் ....நீங்கள் இத்தல இறைவனை வழிபட்டால் .........

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில், கொருக்கை , நாகப்பட்டினம் மாவட்டம்.

அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும். இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும் 

அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம்.


மயிலாடுதுறையிலிருந்து 8 கிலோமீட்டரில் இத்தலம் உள்ளது ....

பேருந்து வசதி உண்டு ....