Wednesday, January 18, 2017

அற்புத பலன்களை அள்ளி  வழங்கும் அரிய திருக்கோயில்கள் 1

நவக்கிரஹ தோஷங்களை அடியோடு நீக்கும் திருத்தலம் .....
பிரம்மன் தான் பெருமானின் சிரசை கண்டதாக பொய்கூறியதால் ஏற்பட்ட தோஷத்தை இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி , இறைவன் பிரம்மபுரீஸ்வரரை வணங்கி போக்கிக்கொண்டான்.

எனவே இறைவன்பிரம்மபுரீஸ்வரர் எனஅழைக்கப்படுகிறார்...
நவக்ரஹங்களும் தங்கள் சாபத்தை நிவர்த்திசெய்து கொண்டன...
இங்கு நவக்ரகங்கள் ஒரே நேர்கோட்டில் இறைவனை எதிநோக்கி அமைந்திருப்பது சிறப்பு.....

சப்த விடங்க தலங்களில் திருக்குவளையும் ஒன்று.


திருக்கோளிலி எனப்படும் இத்தலம் தற்போது திருக்குவளை என அழைக்கப்படுகிறது .....
கோள்களால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதால் இப்பெயர் பெற்றது .....

இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கம் ..
இத்தகைய பழமையும் புராதன பெருமையும் உடைய திருத்தலங்களை தேடி தேடி சென்று தரிசித்தால் துன்பங்கள் நம்மை அண்டுவதற்கும் அஞ்சும் ......

அன்பர்களே சென்று தரிசனம் செய்யுங்கள் 

திருக்குவளை, திருத்துறைப்பூண்டியிலிருந்து கச்சனம் வழியாக எட்டுக்குடி செல்லும்வழியில்உள்ளது...




2 comments: