Monday, January 30, 2017

விடமுண்ட கண்டன் கொலு வீற்றிருக்கும் விடையபுரம் --திருவாரூர் மாவட்டம் 


அன்பர்களே, மிக மிக தூய்மையான எண்ணெய் பிசுக்கற்ற திருகோவிலை காண வேண்டுமா?
இறை திருமேனிகளின் வஸ்திரங்கள் , மடிப்பு கலையாமல் ,இஸ்திரி செய்யப்பட்டது போல் நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் அழகை காண உங்களுக்கு விருப்பமா?
கம்பீரமான மிகப்பெரிய இறைவுருவங்கள் கொலுவீற்றிருக்கும் திருகோயிலை பார்க்க விரும்புகிறீங்களா?
அனைத்திற்கும் மேலாக மகா பெரியவா ஆராதித்த மகத்தான சிவாலயத்தை காண ஆசையா?
அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டியது , திருவாரூர் மாவட்டம் , குடவாசல் வட்டம் , கொரடாச்சேரி( 4 கிலோமீட்டர் )அருகில் உள்ள விடயபுரம் கிராமத்திற்கு.

இச்சிறிய கிராமத்திலும் அதன் அருகிலும் எண்ணற்ற திருகோயில்கள் விளங்குகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட "திருவிடைவாய்" தலம் இதன் அருகில் தான் உள்ளது .

மிக்க வேதனை என்னவென்றால், இறைவன் அருள்செய்ய காத்திருந்தாலும், அவன் அருளை பெற பக்தர்கள் தயாராக இல்லை என்பதுதான் . அடியார் பெருமக்கள் அவசியம் காண வேண்டிய அற்புத திருகோயில் இது .

அர்ச்சகர் வீடு இத்திருகோயில் எதிரிலேயே அமைந்துள்ளது .

இப்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட அன்பர் திரு குமார் கண்ணும்  கருத்துமாக இத்திருக்கோயிலை பேணி  வருகிறார் ....இவரது அலைபேசி எண் தந்துள்ளேன் ....

இவரிடம் தொடர்பு கொண்டு இத்திருக்கோயிலை நீங்கள்  வசதியாக தரிசனம் செய்யலாம் ...

இங்கு உறையும் மீனாட்சி கம்பீரமான பேரழகு பொருந்தியவள் ....
இவளுக்கு திரு குமார் அவர்கள் செய்யும் அலங்காரம் காண கண் கோடி வேண்டும் அன்பர்களே ....

தவற விடாதீர்கள் ....
கண் நோய்கள் தீர்க்கும் கண் கொடுத்த வணிதம் தலம் மிக அருகில் இருக்கிறது ....

சென்று பலன் அடையலாம் .

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விடையபுரம், கண்கொடுத்த வனிதம் அஞ்சல், கமலாபுரம் வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர்- 610102.
திரு குமார் அவர்கள்
Contact No: 98 65 70 66 51





No comments:

Post a Comment