Friday, January 6, 2017

உருக்குலைந்த நிலையில் உமையொரு பாகன் திருகோயில்.
அன்பர்களே, தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகில் கோபுராஜபுரம் என்னும் சிற்றூர் உள்ளது.பாபநாசம் ரயில் பாதையை கடந்து ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல இந்த கிராமத்தை அடையலாம் 
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் ஸ்வர்ணபுரீஸ்வரர் என்பதாகும் .இன்று மிகவும் 
உருக்குலைந்த நிலையில் உள்ளது .

தனித்து விளங்கும் இறைவியின் திருகோயில் முற்றிலும் சிதைந்து விட்டதால் எம்பெருமானுடனேயே எழுந்தருள செய்துள்ளார்கள் .

இங்கு அருள்பாலிக்கும் குபேர லிங்கத்தை உள்ளன்புடன் வழிபட, வறுமை நீங்கி வாழ்வில் வளம் பெறலாம்
என உறுதியுடன் கூறுகிறார்கள் உள்ளூர் பெருமக்கள் .

பழமையும் பெருமையும் பொருந்திய இத்திருகோயில் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே
அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது 



No comments:

Post a Comment