Tuesday, February 7, 2017

சிவநேய செல்வர்களின் சீரிய கவனத்திற்கு .....

ஞானிகள் , ரிஷிகள், மகான்கள் , சித்தர்கள் என பலராலும் வணங்கி வழிபட பெற்ற பல்லாயிரக்கணக்கான திருமேனிகள் , பின்னர் வந்த மாமன்னர்கள் பலரால் போற்றி பாதுகாக்கப்பட்டு ,பிரம்மாண்டமான திருக்கோயில்கள்  அமைக்கப்பட்டு , வழிபாடு செய்யப்பட்டு வந்தது .......

இன்று கால மாற்றங்களினாலும் , அந்நியர்கள் படையெடுப்பாலும் , அவை நிர்மூலமாக்கப்பட்டு சீர்குலைந்து ,பெருமான் தன்னந்தனியே , வானம் பார்த்த திருமேனியராய் , திருக்கோயில் இன்றி , வழிபாடின்றி 
ஏராளமான திருமேனிகள் நம் தமிழகத்தில் காண கிடைக்கின்றன .....

நமது பொறுப்பின்மையும் இதற்கு ஒரு காரணம் .....

அன்பர்களே .....இதோ இங்கே பாருங்கள் .....வீடு கட்டப்படுவதற்காக இப்பெருமான் சாலை ஓரத்திற்கு வந்து விட்டார் ..

எங்கே இருக்கிறார் இவர் ?  
திருவாரூர் மாவட்டம் ,திருத்துறைப்பூண்டி வட்டம்,நேமம் வங்க நகர் செல்லும் சாலையில் , இளநகர் என்னும் கிராமத்தில் தான் இவர் சாலை ஓரத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார் ......

விவசாய கூலி வேலை செய்யும் எளிய மக்கள் வசிக்கும் பகுதி இது .

இந்நிலை கண்டு வருந்திய சிவபீடம் அமைப்பினர் இப்பெருமானுக்கு  மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ....

இத்திருப்பணியில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் சிவபீடம் நிறுவனர் திரு சிவ . முத்துராமன் அவர்களை அவரது அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ....

சிவ முத்துராமன்( www.sivapeedam.org)

சிவபீடம் 9443390589





No comments:

Post a Comment