Sunday, April 2, 2017

நீண்ட நாட்பட்ட நோய்கள் நீங்க திரு ஈங்கோய் மலை வாங்க .......
மரகதாம்பிகை சமேத மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் .. 
இத்தல இறைவன் மரகதத்தால் ஆனவர் ....சிவராத்திரியின் போது 3 நாட்கள் சூரிய பூசை நிகழ்கிறது ...
அச்சமயம் லிங்கம் ஜோதி பிழம்பாக மிளிர்கிறது ....
தேவார பாடல் பெற்ற  தலங்களில் இத்தலம் 63 ஆவது தலமாகும் ....51 சக்தி பீடங்களில் இத்தலமும் ஒன்று ...
மலை மீது அமைந்துள்ள திருக்கோயில் 
திருக்கோயிலை அடைய 560 படிக்கட்டுகள் உள்ளன ...

தலபுராணம் .....
இறைவன் திருமணத்தின் போது உலகை சமன் படுத்த தென்திசை நோக்கி வந்த அகத்தியர் இத்தல இறைவனை 
வழிபட வந்தார் ...அவ்வமயம் கோயில் நடை சாற்றி விடவே , இறைவனை நோக்கி தனக்கு தரிசனம் அளிக்கும்படி வேண்டினார் ....இறைவன் அருளால் ஈ வடிவம் பெற்று கதவு இடுக்கின் வழியே சென்று இறைவன் 
முடித்து பின் தன் சுய வடிவம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது .....

எனவே தான் இத்தலம் ஈங்கோய்மலை என்றும் இறைவன் திருப்பெயர் ஈங்கோய்மலை நாதர் எனவும் அழைக்கப்படுகிறார் 

இறைவன் தீபாராதனையின் போது ஜோதி ஜொலிப்பதை காணலாம் ...
பௌர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷம் ...அன்று ஸ்வாமியும் அம்பாளும் கிரிவலம் செல்கின்றனர் ..
அச்சமயம் தரிசனம் செய்வோர்க்கு நீண்ட நாட்கள் தீராத நோய்கள் அனைத்தும் குணமடைவதாக நம்பிக்கை உள்ளது 

இருப்பிடம் :
திருச்சியிலிருந்து 43 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முசிரியிலிருந்து 7 கிலோமீட்டரில் 
உள்ளது இத்தலம் ....
காலை 9 மணி முதல் 6 மணி வரை நடை திறந்திருக்கும் ....
தொலைபேசி எண்கள் :
94439 50031
04326 262744