Tuesday, May 23, 2017

⧭ குன்றாத வளம் பல நல்கும் குன்னியூர் சிவாலயம்  ⧭

இறைவன் திருப்பெயர் விஸ்வநாதர் இறைவி விசாலாக்ஷி 
அன்பர்களே திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் ஏராளமான புராதனமான திருக்கோயில்கள் அமைந்துள்ளன ....
அவற்றுள் மிக புராதனமானதும் சக்தி வாய்ந்ததும் ஆன  குன்னியூர் சிவாலயம் பிரதான சாலையின் ஓரத்திலேயே அழகுற அமைந்துள்ளது ....

முன்புறம் சிறிய நந்தவனத்துடன் கூடிய சிறப்பாக பராமரிக்கப்படும் திருக்கோயில் ....
கருவறையில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தியுடன் வீற்றிருக்கிறார் இப்பெருமான் ....
ஆம்! இவரை வழிபடுவதால் குறையாத நலம் பல விளையும் ...செல்வ வளம் பெருகும் ..
வறுமை விட்டொழியும் ...முக்தி கிட்டும் ....
 விஸ்தாரணமான முன்மண்டபத்தில் வலப்புறம் பெரிய திருமேனியாக ஒரு லிங்கம் காணப்படுகிறது ..
ஒரே சுற்றுடன் விளங்கும் இத்திருக்கோயிலில் சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறையாக 
நடைபெறுகிறது .......தூய்மையான திருக்கோயில் ....சுற்றிலும் ஏராளமான பாடல் பெற்ற தலங்கள் சூழ விளங்கும் இந்த திருக்கோயிலை ஒருமுறை சென்று தரிசனம் செய்யுங்களேன் ......

அமைவிடம் :  திருவாரூர்----திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரிலிருந்து ஏறத்தாழ 15 கிலோமீட்டர் ...



No comments:

Post a Comment