Wednesday, May 24, 2017

இல்லாள் வருவாள் ......நல்லறம்   சிறக்க ......⧭
அன்பர்களே , இல்வாழ்க்கை துணை அமையும் இனிய நேரம் வரவில்லையா?
பரிகாரங்கள் பல செய்தும் பலனில்லையா ? கவலை வேண்டாம் !!
கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன் ?

வாருங்கள் திருமண மங்கலம் திருத்தலத்திற்கு . எங்கே உள்ளது இத்தலம் ?
குரு பகவான் அருள்புரியும் ஆலங்குடிக்கு வெகு அருகில் , நடை பயண தூரம் தான் .

இங்கு தான் ஆலங்குடி ஆபத்சஹாயேஸ்வர சுவாமிக்கும் , ஏலவார்குழலி அம்மைக்கும் திருமணம் நடை பெற்றது . இன்றும் பிரம்மோஸ்தவத்தின் போது , இறைவனின் திருமண உத்சவம் இங்கு தான் நடைபெறுகிறது . எனவே தான் இத்தலம் திருமண மங்கலம் (தற்போது திருவோண மங்கலம் ) என்று
அழைகப்படுகிறது .

மேலும் , மயானத்திற்கு நேர் எதிர் உள்ள வெகு சில தலங்களுள் இதுவும் ஒன்று . எனவே சிறந்த பரிகார தலமாக இது விளங்குகிறது . திருமண தடைக்கு இது மிக சிறந்த பரிகார தலம் .

இங்கு வந்து இறைவனை உளமார வழிபட திருமணம் உறுதி . இத்தனை சிறப்புகள் இருந்தும் அதிகம் அறியபடாத தலமாகவே இது இருந்து வருகிறது .

ஆலங்குடி குரு கோவிலின் வாசலிலேயே , இத்திருகோயிலின் அர்ச்சகர் வீடு உள்ளது .

அவரை கையோடு அழைத்து சென்று தரிசனம் செய்யலாம் .

படத்தில் இறைவன் விசாலேஸ்வரர் 




1 comment: