Sunday, August 13, 2017

.⧭ சிவ கைங்கர்யம் ...பூர்வ ஜென்ம பாக்கியம் ....⧭

அருள்மிகு ஆரியகும்பகேஸ்வரர் திருக்கோவில். ஆரியம்பாக்கம்

வாலாஜாபாத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வழியில் சின்னசத்திரம் சென்று இவ்வூரை அடையலாம் .மிக பழமையான சிவாலயம் சிதைந்து சுவாமியும்மிக பெரிய நந்தி மூர்த்தமும் வானம்பார்த்து அருள்பாலிக்கின்றனர் .

சாய்ந்திருந்த சிவலிங்க திருமேனியை குங்கிலிய கலய நாயனாரை மனதில் நினைத்து இத்திருப்பணியை தொடங்கினார்கள் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை யினர் .இத்திருபணியில் இக்கிராமமக்கள் திரளாக வந்து திருத்தொண்டு செய்தார்கள் .

.விரைவாக இங்கு திருக்கோவில் அமையவுள்ளது.அதற்கான முயற்சியை எடுத்து வருகிறார்கள் .அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை பொருளாக மட்டும் தரலாம்.

சுவாமி திருவருளால் மேற்கூரைத்திருப்பணியும் , திருவேள்வியும் நடைபெற்றது .சிறப்பான வழிபாடு நடந்தேறியது இக்கிரமமக்கள் நந்தியம் பெருமானுக்கு அமைத்த மேற்கூரைக்கு Rs .15000 கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .

தொடர்புக்கு- திரு. சுமன் -9444163818.
-திரு.சுரேஷ்-7527015100